» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக கடலில் விழுந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். 

தூத்துக்குடி முத்தரையர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் மாயாண்டி (26). மீனவரான இவர் நேற்று சக மீனவர்கள் 4 பேருடன் திரேஸ்புரத்தில் இருந்து நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். திரேஸ்புரத்தில் இருந்து கிழக்கே சுமார் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மாயாண்டி எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துள்ளார். 

சக மீனவர்கள் அவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory