» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் கடந்த 2011ஆம் ஆண்டில் இளைஞரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி காலங்கரை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன் சபரி வாசகன் (21/2011)என்பவரை கடந்த 2011ஆம் ஆண்டு தாக்கி நகை பறித்த வழக்கில், ஜார்ஜ் ரோடு ஜோசப் சந்தியா மகன் பொவின்ராஜ் (20/2011), மினி சகாயபுரம் டோம்னிக் மகன் ஆக்னல் (21/2011), பாத்திமா நகர் அலாய்சியஸ் கோஸ்தா மகன் பென்கர் (23/2011), மற்றும் ஆஸ்வால்ட் மகன் இதழ் பட்டு (23/2011) ஆகிய 4 பேர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் அப்போதைய ஆய்வாளர் வீமராஜ் வழக்குப் பதிவு செய்தார். 

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் 3) நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா 500 ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி வாதாடினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory