» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!

வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)



தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் வெற்றி பெற வேண்டி கோவில்பட்டியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கியின் (TMB) கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வை கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 60 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். 

இவர்களுக்காகக் கல்லூரி நிர்வாகம் சார்பில் பிரத்யேகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தேர்வுக்குத் தயார் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டி, கோவில்பட்டி அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை சிறப்புப் பூஜை நடைபெற்றது. கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், கல்லூரிச் செயலாளர் கண்ணன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

வங்கித் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தங்களது தேர்வு நுழைவுச்சீட்டுகளை அம்மனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து ஆசி பெற்றனர். இந்தச் சிறப்புப் பூஜையில் கல்லூரி முதல்வர் செல்வராஜ், கோவில் கமிட்டி உறுப்பினர் பாலமுருகன், பேராசிரியர்கள் ராமஜெயா, பிரியங்கா, பிரபாகரன், ரீத்திகா, பாரதி, அலுவலக ஊழியர் கருப்பசாமி மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பூஜையின் நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory