» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊருக்குள் வந்த மான் தெருநாய்கள் கடித்து பலி!
புதன் 4, பிப்ரவரி 2026 5:02:22 PM (IST)
கயத்தாறில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மான் தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக இறந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் ராஜீவ் நகரில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று அங்கு தண்ணீர் தாகம் தீர்க்க வீடுகள் மற்றும் குளத்திற்கு வந்தது. அப்போது தெருநாய்கள் சுற்றி வளைத்து இடித்தது கண்டு அப் பகுதி வழியாக வந்ததெற்குமயிலோடையைச்சேர்த ஆட்டோ டிரைவர் சுடலைக்கண்ணு என்பவர் கீழே இறங்கி நாய்களை துறத்தி மானை தூக்கி கொண்டு கயத்தாறு கால்நடை மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
ஆனால் மான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து.இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் கோவில்பட்டி வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் அவர்கள் வந்து மானைகால்நடைமருத்துவர் வேதிக்கா பிரேத பரிசோதனை செய்து குருமலை காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கயத்தாறு பகுதியில் தண்ணீர் தேடி வரும் மான்கள் தெருநாய்களால் பலியாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் தீவிர சோதனை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:09:03 PM (IST)

தூத்துக்குடியில் 50 ஆண்டுகால பயணிகள் நிழற்குடை இடிப்பு: முன்னாள் மேயர் கண்டனம்; கவுன்சிலர் விளக்கம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:58:57 PM (IST)










