» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

வெள்ளி 16, ஜனவரி 2026 11:11:50 AM (IST)

தூத்துக்குடியில் 3முறை தற்கொலைக்கு முயன்ற மீனவர் 4வது முறையாக மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியில் வசிப்பவர் முத்துச்சாமி இவரது மகன் மாரி செல்வம் (41). மீனவர் ஆன இவருக்கு திருமணம் ஆகி உமையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உமையம்மாள் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். அதிலிருந்து மனவேதனையில் இருந்த மாரி செல்வம் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அப்போது அவரை குடும்பத்தினர்கள் காப்பாற்றியுள்ளனர்.
 
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாரி செல்வம் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர்கள் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சுனாமி காலனி புதிய துறைமுகம் ரோட்டில் உள்ள ஒரு மரத்தில் மாரி செல்வம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த தெர்மல் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அய்யம் பிள்ளை சம்பவ இடத்துக்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory