» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் முதல்வருடன் சந்திப்பு

திங்கள் 23, ஜூன் 2025 3:37:51 PM (IST)



தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

தலைமைச் செயலகத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினை இன்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  புதுக்கோட்டை விஜயா மற்றும் உறுப்பினர்கள் டாக்டர் எம். சுசிமிர் ராஜ், டாக்டர் மோனா மெட்டில்டா பாஸ்கர்,  ஆர். ஜெயசுதா, டாக்டர் வி. உஷா நந்தினி,  வி. செல்வேந்திரன்,  ஸ்ரீ காவியா நாகராஜன் ஆகியோருடன்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்  கீதாஜீவன்  சந்தித்தார்.

இந்நிகழ்வில் துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர்  ஜெயஸ்ரீ முரளிதரன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குனர்  ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory