» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் யார்டு பராமரிப்பு பணி காரணமாக ஜுன் 23ந் தேதி முதல் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையிலிருந்து இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தாம்பரத்தில் இருந்து வருகிற ஜுன் 22-ந்தேதி முதல் ஜுலை 21 ந் தேதி வரை இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 20691 நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.
மேலும் வருகிற ஜுன் 23 ந் தேதி முதல் ஜுலை 22 ந் தேதி வரை அந்தியோக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 20692 திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரம் செல்கிறது.
மேலும் வருகிற ஜுன் 21 ந் தேதி முதல் ஜூலை 22 ந் தேதி வரை சென்னையிலிருந்து நாகர்கோவில் வருகிற 3 ரயில்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெறுகிற யார்டு பராமரிப்பு பணி காரணமாக கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மாலையில் புறப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையம் வந்து பின்னர் சென்னை தாம்பரம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைகிறது. இவ்வாறு தென்னக ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக வ.உ.சி. துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 9:35:22 PM (IST)

பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:31:33 PM (IST)

அம்பையில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:10:18 PM (IST)

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

புதூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:23:24 PM (IST)









