» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குடிநீர் திட்டப் பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

சனி 12, ஏப்ரல் 2025 8:03:54 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றும் வரும் குடிநீர் திட்டப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக சிவந்தாகுளம் பிரதான சாலையில் தற்போது நடைபெற்று வரும் கதிர்வேல் நகர் பகுதியில் குடிநீர் குழாய் மாற்றும் பணிகளையும், சுப்பையா வித்யாலயம் பள்ளி அருகில் பணிகள் நிறைவுற்ற குடிநீர் வாழ்வு மாற்றும் பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், டீச்சர்ஸ் காலனி பகுதியில் ஒரு சில வீடுகளில் முறையாக குடிநீர் வரவில்லை என்று மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை தொடர்ந்து அதனையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார். ஆய்வின் போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory