» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3பேர் கைது

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:59:51 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

தூத்துக்குடி ஜெ.ஜெ.நகரை சோ்ந்தவா் ஸ்ரீராம் என்ற வெள்ளையன்(24). இவர் சம்பவத்தன்று அங்குள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தபோது, 3பேர் மதுபோதையில் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். 

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரண நடத்தினார். இதில், தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த சுடலைமுத்து மகன் மதன்குமார் (23),  3வது மைல் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் மாலைக்கனி (23)  கண்ணன் மகன் சிவா (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory