» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் : வாலிபர் கைது

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:32:20 AM (IST)

நாலாட்டின்புதூர் அருகே பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே கிளவிப்பட்டி நடுத் தெருவை சேர்ந்தவர் மொட்டைசாமி மனைவி பேச்சியம்மாள் (39). இவர் தனது வீட்டுடன் சிறிய கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சிகரெட் வாங்கிய இளைஞரிடம் ணம் கேட்டபோது, அவரை அவதூறாக பேசினாராம். 

இதை பேச்சியம்மாள் கண்டித்தாராம். அந்த இளைஞர் பேச்சியம்மாளை அவதூறாக பேசி, அவர் அணிந்திருந்த ஆடையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பேச்சியம்மாள் திங்கள் கிழமை அளித்த புகாரின் பேரில் நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப்பதிந்து, அதே ஊர் மேல காலனியேச் சேர்ந்த பூபதி மகன் மனோவை (23) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory