» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் : வாலிபர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:32:20 AM (IST)
நாலாட்டின்புதூர் அருகே பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே கிளவிப்பட்டி நடுத் தெருவை சேர்ந்தவர் மொட்டைசாமி மனைவி பேச்சியம்மாள் (39). இவர் தனது வீட்டுடன் சிறிய கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சிகரெட் வாங்கிய இளைஞரிடம் ணம் கேட்டபோது, அவரை அவதூறாக பேசினாராம்.
இதை பேச்சியம்மாள் கண்டித்தாராம். அந்த இளைஞர் பேச்சியம்மாளை அவதூறாக பேசி, அவர் அணிந்திருந்த ஆடையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பேச்சியம்மாள் திங்கள் கிழமை அளித்த புகாரின் பேரில் நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப்பதிந்து, அதே ஊர் மேல காலனியேச் சேர்ந்த பூபதி மகன் மனோவை (23) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி!!
வெள்ளி 23, மே 2025 5:00:18 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழ்வாய்வு: ட்ரோன் மூலமாக அளவீடு பணிகள் தொடங்கியது!
வெள்ளி 23, மே 2025 4:51:56 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தலா ரூ50 ஆயிரம் நிதி : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.
வெள்ளி 23, மே 2025 4:22:20 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 23, மே 2025 4:06:13 PM (IST)

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 23, மே 2025 4:02:59 PM (IST)

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவை
வெள்ளி 23, மே 2025 3:47:36 PM (IST)
