» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் : கிராம மக்கள் கோரிக்கை!
திங்கள் 7, ஏப்ரல் 2025 11:54:29 AM (IST)

விளாத்திகுளம் அருகே இளம் கல்லூரணி கிராமத்தில் குடிநீர் வசதி, தெருக்களில் பேவர் பிளாக் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளம் கல்லூரணி கிராமம் வங்காள விரிகுடா கடல் அருகே உள்ள கிராமமாகும், இக்கிராமத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முற்றிலும் கிடையாது. ஆகவே கிராம மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தரும்படி கோரிக்கையாக கூறிக்கொள்கிறோம்.
வைப்பார் ஆற்று பாலம் அருகில் புதிய வட்டக் கிணறு அமைக்கப்பட்டு மற்றும் அதனைச் சார்ந்து புதிய பைப் லைன் அமைந்தும், மேலும் தற்போது உள்ள நடைமுறையிலிருக்கின்ற HT டேங்க் 10,000-விட்டர் கொள்னை 60,000-லிட்டர் கொள்ளலவாக அதிகரித்து HT டேங்க அமைப்பதோடு 10,000 லிட்டர் ஜம்பு ஒன்று அமைத்து கிராமமக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். மேலும், தெருக்களில் பேவர் பிளாக் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 9:31:10 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு தரிசனம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:21:49 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:04:43 PM (IST)

கோவில்பட்டியில் தீ தொண்டு நாள் வாரவிழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:23:54 PM (IST)

சமத்துவநாள் விழாவில் ரூ.13.74 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள் : அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:19:57 PM (IST)

திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விழா: ஆன்மிக இயக்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 3:34:24 PM (IST)
