» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் : கிராம மக்கள் கோரிக்கை!

திங்கள் 7, ஏப்ரல் 2025 11:54:29 AM (IST)



விளாத்திகுளம் அருகே இளம் கல்லூரணி கிராமத்தில் குடிநீர் வசதி, தெருக்களில் பேவர் பிளாக் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளம் கல்லூரணி கிராமம் வங்காள விரிகுடா கடல் அருகே உள்ள கிராமமாகும், இக்கிராமத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முற்றிலும் கிடையாது. ஆகவே கிராம மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தரும்படி கோரிக்கையாக கூறிக்கொள்கிறோம். 

வைப்பார் ஆற்று பாலம் அருகில் புதிய வட்டக் கிணறு அமைக்கப்பட்டு மற்றும் அதனைச் சார்ந்து புதிய பைப் லைன் அமைந்தும், மேலும் தற்போது உள்ள நடைமுறையிலிருக்கின்ற HT டேங்க் 10,000-விட்டர் கொள்னை 60,000-லிட்டர் கொள்ளலவாக அதிகரித்து HT டேங்க அமைப்பதோடு 10,000 லிட்டர் ஜம்பு ஒன்று அமைத்து கிராமமக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். மேலும், தெருக்களில் பேவர் பிளாக் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education



New Shape Tailors




Thoothukudi Business Directory