» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் தீ தொண்டு நாள் வாரவிழா

திங்கள் 14, ஏப்ரல் 2025 7:23:54 PM (IST)



கோவில்பட்டியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தீ தொண்டு நாள் வாரவிழா காந்தி மைதான வளாகத்தில் நடந்தது.

தீ விபத்தில்லா உலகை உருவாக்கிடவும்,தீ  விபத்தின் போது பணிபுரிந்து உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறவும்,தீயணைப்பு வீரர்களின் சேவையை பாராட்டவும், ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி முதல் ஏப்ரல்20ம் தேதி வரை தீ தொண்டு நாள் வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டியில் நடந்த தீ தொண்டு நாள் நிகழ்விற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் தாமோதரகண்ணன் தலைமை வகித்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கோவில்பட்டி நிலைய அலுவலர் ராஜேந்திரன், ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

இதில் பொது மக்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, நடராஜன், முத்துமுருகன்,ராஜேந்திரன்,பழனிக்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் (போக்குவரத்து) மலையாண்டி,முன்னணி தீயணைப்பு வீரர் இசக்கிராஜா,உள்பட தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors


CSC Computer Education








Thoothukudi Business Directory