» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

ஞாயிறு 20, ஏப்ரல் 2025 6:46:51 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகும் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். 

தற்போது 10,11,12-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் குடும்பம், குடும்பமாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

அவர்கள் காலையில் இருந்து கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் நிறுத்த வசதியாக போக்குவரத்து போலீசார் ஆங்காங்கு தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்திருந்தனர். கோடை வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக பல இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்நது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory