» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வைப்பாற்றில் முதியவர் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை

திங்கள் 7, ஏப்ரல் 2025 10:25:32 AM (IST)

எட்டயபுரம் அருகே வைப்பாற்றில் மிதந்த 70 வயது முதியவர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள நம்பிபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் கிருஷ்ணசாமி (70). இவருக்கு சண்முககனி என்ற மனைவியும் 4 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கிருஷ்ணசாமி கடந்த 6 மாதமாக மனம் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்

நேற்று பாத்ரூம் செல்வதாக சொல்லிச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று கீழ நம்பிபுரம் ஊருக்கு வடக்கே உள்ள வைப்பாற்றில் இறந்து மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education



New Shape Tailors






Thoothukudi Business Directory