» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி

திங்கள் 7, ஏப்ரல் 2025 8:55:59 AM (IST)

ஆறுமுகநேரி அருகே 2 மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகேயுள்ள தலைவன்வடலியை சேர்ந்தவர் பொன்சந்தனராஜ் (17). இவர் நாலுமாவடியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்தமாதம் நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வை எழுதிய அவர் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இவரது தாயார் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். 

சம்பவத்தன்று இரவு திருச்செந்தூர் கோவிலுக்கு வேலைக்கு சென்ற தனது தாயாரை மோட்டார்சைக்கிளில் ஏற்றி கொண்டு சாகுபுரம் பஸ்நிறுத்தத்தில் இறக்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே, ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செல்வராஜ் மகன் ஜான்பால் (35), அதே பகுதியைச் சேர்ந்த யூனுஸ் மகன் நிகில் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் ஆத்தூரில் கட்டிட வேலையை முடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். 

மோட்டார் சைக்கிளை ஜான்பால் ஓட்டியுள்ளார்.சாகுபுரம் அருகே வந்தபோது கண்இமைக்கும் நேரத்தில் பொன்சந்தனராஜ்(17) ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், ஜான்பால் ஓட்டிய மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளனர்.

இதில் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்த பொன் சந்தனராஜை காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதற்கிடையில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், ஜான் பால் ஆகியோர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொன் சந்தனராஜ் நேற்றுமுன்தினம் காலையில் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory