» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்

சனி 12, ஏப்ரல் 2025 5:00:17 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் த.கனகராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புக் கல்வி பற்றியும், கல்வியியல் பயின்ற மாணவர்கள் என்னென்ன போட்டித் தேர்வுகளை எவ்வாறு எளிதாக எழுதலாம் என்பதை உளவியல் அறிஞர் கார்டனின் நுண்ணறிவு கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கினார். 

மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் பெருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இறுதியாக வரலாற்று துறை பேராசிரியர் கு.இராஜதுரை நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory