» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆலந்தலை திருத்தலத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 5, ஏப்ரல் 2025 10:13:58 AM (IST)

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் தவக்கால 4வது வார சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி சாம்பல் புதன் முதல் தொடங்கி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் 4ஆம் வாரம் இந்த மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் அருகே ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக்கெபி திருத்தலத்தில் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது.
இதில் 14 ஸ்தலங்களில் இயேசுவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் ஆலந்தலை திருக்குடும்ப உயர்நிலைப்பள்ளி மற்றும் திருக்குடும்ப தொடக்கப் பள்ளியினைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் இணைந்து திருச்சிலுவைப்பாதை வழிபாட்டினை தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை ஜோதிமணி, திருத்தொண்டர் ஸ்டாலின் திருத்தல நிதி குழுவினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சாவு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:52:41 PM (IST)

காவல்துறை சார்பில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:38:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரம்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:28:22 PM (IST)

வீட்டில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 2பேர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:09:59 PM (IST)

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:44:24 AM (IST)

தூய இம்மானுவேல் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:35:04 AM (IST)
