» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆலந்தலை திருத்தலத்தில் சிலுவை பாதை வழிபாடு

சனி 5, ஏப்ரல் 2025 10:13:58 AM (IST)



ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் தவக்கால 4வது வார சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது. 

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி சாம்பல் புதன் முதல் தொடங்கி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் 4ஆம் வாரம் இந்த மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் அருகே ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக்கெபி திருத்தலத்தில் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது. 

இதில் 14 ஸ்தலங்களில் இயேசுவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் ஆலந்தலை திருக்குடும்ப உயர்நிலைப்பள்ளி மற்றும் திருக்குடும்ப தொடக்கப் பள்ளியினைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் இணைந்து திருச்சிலுவைப்பாதை வழிபாட்டினை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். 

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை ஜோதிமணி, திருத்தொண்டர் ஸ்டாலின் திருத்தல நிதி குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education



New Shape Tailors




Thoothukudi Business Directory