» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் அமைக்க பா.ஜ.க. கோரிக்கை!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 7:49:51 PM (IST)

நாசரேத்தில் பழைய கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பா.ஜ.க. ஆழ்வார்திருநகரி மண்டல் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி அனுப்பியுள்ள மனுவில் "நாசரேத் பேரூராட்சி பகுதியில் மிகவம் பழமையான கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இதன் மேற்கூரை ஓடுகளால் அமையப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தின் உறுதிதன்மை சரியில்லாத காரணத்தினால் ஆபத்து நேரிடக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். சிறியவர்கள் பெரியவர்கள் மற்றும் முதியோர்கள் பலதரப்பட்ட மக்கள் வரக்கூடிய இந்த இடம் மிகுந்த மோசமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் விளக்கு கூட எரிவது கிடையாது.
இதில் சில மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை காம்பவுண்டுக்குள் போட்டு செல்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இதனை பார்வையிட்டு உடனடியாக இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைத்து புதிதாக சுற்றுச் சுவர் அமைத்து விளக்கு எரிய ஆவன செய்து தர வேண்டும்" என அந்த கடிதத்தில் கோரிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11 உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 9:18:03 PM (IST)

முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:20:04 PM (IST)

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த அரசு டவுன் பேருந்து : தூத்துக்குடி அருகே பரபரப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:05:20 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 7:59:17 PM (IST)

இன்ஸ்டாகிராமில் மோசடி: ரூ.3 லட்சம் பணம் மீட்பு - உரியவரிடம் எஸ்பி ஒப்படைத்தார்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:55:02 PM (IST)

மண்வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சாவு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:52:41 PM (IST)
