» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த அரசு டவுன் பேருந்து : தூத்துக்குடி அருகே பரபரப்பு

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:05:20 PM (IST)



தூத்துக்குடி அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெருங்குளத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசு பேருந்து இன்று மாலை 4.30 மணிக்கு சேர்வைக்காரன்மடம் ஊராட்சி தங்கம்மாள்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மளிகை கடை மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. 

நல்வாய்ப்பாக பேருந்தில் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் உட்பட சுமார் 70 பயணித்த நிலையில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு சாயர்புரம் உதவி காவல் ஆய்வாளர் சூசை அந்தோணி விரைந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory