» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த அரசு டவுன் பேருந்து : தூத்துக்குடி அருகே பரபரப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:05:20 PM (IST)

தூத்துக்குடி அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெருங்குளத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசு பேருந்து இன்று மாலை 4.30 மணிக்கு சேர்வைக்காரன்மடம் ஊராட்சி தங்கம்மாள்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மளிகை கடை மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
நல்வாய்ப்பாக பேருந்தில் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் உட்பட சுமார் 70 பயணித்த நிலையில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு சாயர்புரம் உதவி காவல் ஆய்வாளர் சூசை அந்தோணி விரைந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










