» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு : கொள்ளையன் கைது!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:35:35 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தாளமுத்து நகர், குமரன் நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் மனைவி ரத்தினம்மாள் (64). இந்த தம்பதியர் கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று விட்டனர். பின்னர் 1ஆம் தேதி ஊர் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ரத்தினம்மாள் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், தூத்துக்குடி சுந்தரவேல் புரம் 9வது தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முருகன் என்ற கட்ட முருகன் (40) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர். கைது செய்யப்பட்ட முருகன் மீது தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி உள்பட பல காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory