» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் சக்கரத்தில் சேலை சிக்கி விபத்து: பெண் பலி!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:11:28 AM (IST)
நாலாட்டின்புதூா் அருகே பைக்கின் பின்சக்கரத்தில் சேலை சிக்கியதில் கீழே விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி அருகே விஸ்வநத்தத்தைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி ஜோதிமணி (32). இவரும், இவரது உறவினா் மணிகண்டனும் (35) பைக்கில் எப்போதும் வென்றான் ஊரில் உள்ள சோலைச்சாமி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தாா்களாம்.
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின் புதூரையடுத்த கட்டாலங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஜோதிமணியின் சேலை பைக்கின் பின்சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா்.
அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா். இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










