» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் சக்கரத்தில் சேலை சிக்கி விபத்து: பெண் பலி!

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:11:28 AM (IST)

நாலாட்டின்புதூா் அருகே பைக்கின் பின்சக்கரத்தில் சேலை சிக்கியதில் கீழே விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி ஜோதிமணி (32). இவரும், இவரது உறவினா் மணிகண்டனும் (35) பைக்கில் எப்போதும் வென்றான் ஊரில் உள்ள சோலைச்சாமி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தாா்களாம்.

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின் புதூரையடுத்த கட்டாலங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஜோதிமணியின் சேலை பைக்கின் பின்சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா்.

அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா். இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory