» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 3வது நாளாக வழக்கறிஞர்கள் ஸ்ட்ரைக் : நீதிமன்ற பணிகள் பாதிப்பு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:27:30 AM (IST)
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று 3வது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதனை கண்டித்தும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வருகின்றனர். நேற்று கண்டன ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 3வது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 272 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 782 வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இதனால் வாய்தாவுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் தனசேகர் டேவிட் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிளகாய் வத்தலுக்கு ரூ.25 ஆயிரம் ஆதார விலை: தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:16:16 AM (IST)

பைக் சக்கரத்தில் சேலை சிக்கி விபத்து: பெண் பலி!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:11:28 AM (IST)

பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்க நடவடிக்கை: ஆட்சியரிடம் சமக கோரிக்கை!
திங்கள் 7, ஏப்ரல் 2025 9:25:32 PM (IST)

ஹோட்டல் கழிவு நீர் தொட்டியில் விழுந்த குழந்தை : தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:44:29 PM (IST)

மகாவீர் ஜெயந்தி விழா: ஏப்.10ல் டாஸ்மாக் கடகளை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:33:52 PM (IST)

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:26:59 PM (IST)
