» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமர் பாம்பன் வருகை: தூத்துக்குடி கடல் பகுதியில் போலீஸ் ரோந்து பணி தீவிரம்!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:17:57 AM (IST)

பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் வருகையையொட்டி தூத்துக்குடி கடல் பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து 6-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கு வருகிறார். இதனை தொடர்ந்து கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் படகுகளில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியாக படகுகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்கின்றனர். அதே போன்று தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு சென்றும் ஆய்வு செய்து வருகின்றனர். தீவுகளில் சந்தேகப்படும்படியாக நடமாட்டங்கள் உள்ளதா என்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதே போன்று கடலோர கிராம மக்களை சந்தித்து சந்தேகப்படும்படியான நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital





CSC Computer Education





Thoothukudi Business Directory