» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் பயணிகள் பாதுகாப்பு வாட்ஸ்அப் குழு: தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு

வியாழன் 3, ஏப்ரல் 2025 4:56:29 PM (IST)



தூத்துக்குடி காமராஜர் மகளிர் கலைக் கல்லூரியில் இரயில் பெண் பயணிகளின் வாட்ஸ்அப் பாதுகாப்பு குழு விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் சார்பில் காமராஜர் மகளிர் கலைக் கல்லூரியில் இரயில் பெண் பயணிகளின் வாட்ஸ்அப் பாதுகாப்பு குழு விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காவல் சார்பு ஆய்வாளர்கள் பெருமாள் மற்றும் மகாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் இரயில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் மற்றும் அவசர உதவி எண்கள் 139, 1512, வாட்ஸ்அப் எண் 9962500500, காவல் உதவி செயலியை பயன்படுத்துவது பற்றியும் எடுத்துரைத்தனர். 

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் RPF / ASI பால்பாண்டி, மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலர் கார்த்திகா, அங்காள ஈஸ்வரி, ரயில் பெண் பயணிகள் பாதுகாப்புக்குள் உறுப்பினர்கள் மற்றும் பிஏ பொருளியல் பிரிவு மாணவிகள் உட்பட சுமார் 70 நபர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory