» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஐஸ் வியாபாரி மீது தாக்குதல்: இளைஞர் கைது!

புதன் 2, ஏப்ரல் 2025 8:02:42 PM (IST)

சாத்தான்குளம் அருகே ஐஸ் வியாபாரியை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜாசிங் (60). ஐஸ் வியாபாரியான இவர் நேற்று கோமானேரி பகுதியில் ஐஸ் வியாபாரத்தை முடித்து விட்டு அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த அதே ஊரைச் சேர்ந்த இசக்கிபமுத்து மகன் பரமசிவம் (37) என்பவர் ராஜாசிங்கிடம் தகராறு செய்துள்ளார். 

இதனால் ஏற்பட்ட பிரச்னையில் பரமசிவன், ராஜாசிங்கை தாக்கினாராம். இதில் காயமடைந்த ராஜாசிங் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜாசிங் அளித்த பகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் வழக்குபதிந்து பரமசிவத்தை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors




CSC Computer Education




Thoothukudi Business Directory