» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பார் அசோஷியேசன் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

திங்கள் 7, ஏப்ரல் 2025 10:16:54 AM (IST)

தூத்துக்குடியில் பார் அசோஷியேசன் தேர்தல்  வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. 

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ள தூத்துக்குடி பார் அசோசியேசன் அமைப்பு உள்ளது. இதில், தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் மற்றும் 7 நிர்வாக குழு உறுப்பினர்கள், மற்றும் 7 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன.

நடப்பு 2025-26ம் ஆண்டு பதவிக்காலத்துக்கான நிர்வாகிகள் தேர்தல் ஏப்.3ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். இன்று மாலை மனுக்கள் பரிசீலனையும், 9ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

30ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை தகுதியான வாக்காளர்கள் ஓட்டுப் பதிவு செய்யலாம். அன்று மாலை 4:30 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



New Shape Tailors





Arputham Hospital




Thoothukudi Business Directory