» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜல்லிக்கட்டு காளை திருட்டு: போலீஸ் விசாரணை

புதன் 16, ஏப்ரல் 2025 7:49:38 AM (IST)

கோவில்பட்டி அருகே ஜல்லிக்கட்டுக் காளையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த முடுக்கலான்குளம் கீழத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பொன்மாடசாமி (52). விவசாயியான இவர், கொப்பம்பட்டி-முடுக்கலான்குளம் சாலையில் உள்ள தனது தோட்டத்தில் ஆடு, பசுக்கள், ஜல்லிக்கட்டுக் காளை ஆகியவற்றை வளர்த்து வருகிறாராம்.

இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, ஜல்லிக்கட்டுக் காளையைக் காணவில்லையாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து, மாட்டைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory