» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விரைவுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதன் 16, ஏப்ரல் 2025 7:54:01 AM (IST)
பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் விரைவுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும். பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். கடுமையாக நடந்துகொள்ளும் நிர்வாக இயக்குநரைக் கண்டிப்பதுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில், விரைவுப் போக்குவரத்துப் பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பணிமனைத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். சிஐடியூ மாநிலச் செயலர் பிச்சைமணி ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தார். சிஐடியூ ரயில்வே ஊழியர் சங்க நிர்வாகி டென்சிங், சிஐடியூ மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் பேசினர். முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்றோர் அமைப்பு நிர்வாகிகள் பூபதி, கதிரேசன் நல்லபெருமாள், சிஐடியூ நிர்வாகிகள் ஜோசப், பீட்டர் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










