» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அறிமுகம்: சில்லறை பிரச்சனைக்கு தீர்வு!

புதன் 16, ஏப்ரல் 2025 8:05:26 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகம் செய்யப்படுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பயணிகள்-நடத்துநர்களிடையே சில்லறை தொடர்பாக வாக்குவாதம் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும்வகையில், டிஜிட்டல் முறையிலான பணமில்லா பரிவர்த்தனை என்ற பெயரில் அரசுப் பேருந்துகளில் கியூஆர் கோடு அல்லது கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் இப்பரிவர்த்தனையை போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் நேற்று தொடக்கி வைத்தார். அப்போது அவர் கூறியது: அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

டெபிட், கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்தோ, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ, ஜிபே, போன் பே போன்ற செயலிகள் மூலமாகவோ பணம் செலுத்தி, நடத்துநரிடம் பயணச்சீட்டு பெறலாம் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory