» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: ஒருவர் பலி

திங்கள் 7, ஏப்ரல் 2025 10:35:30 AM (IST)

முறப்பநாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

மணக்கரை வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் நெல்லையா மகன் பாலையா (50). இவர் டிவிஎஸ் எக்ஸ்எல் மோட்டார் சைக்கிளில் வல்லநாடு கீழூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற லாரி இவரது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து,  கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காளியர் கரிசல் குளத்தைச் சேர்ந்த துரை ராஜ் மகன் பத்மநாபன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory