» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சலூன் கடையை சேதப்படுத்திய வாலிபர் கைது!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:25:09 AM (IST)

தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.புரத்தில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், அவரது கடை முன் மது போதையில் ஒருவா் தகராறு செய்தாராம். மேலும், அங்கு கிடந்த கல்லை எடுத்து கடையில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினாராம்.

இது குறித்த பரமசிவன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், கடையைச் சேதப்படுத்தியது பிரையன்ட் நகரைச் சோ்ந்த சுதன் (28) என்பவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory