» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)
தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி தாளமுத்து நகர், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் என்ற ஜஸ்டின் சீலன் (35), எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திர பிரியா (31) என்ற மனைவியும், ஸ்டேபி (10) ஆரோக்கிய பிரின்ஸ் (8) மற்றும் ஜெசிக்கா (10 மாதம்) என 3 குழந்தைகள் உள்ளனர்.
ஜஸ்டின் சீலன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை துன்புறுத்துவாராம். மேலும், வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க மாட்டாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சந்திர பிரியா தனது 3 குழந்தைகளுக்கும் தலைக்கு தேய்க்கும் சாயத்தை குடிக்கச் செய்துள்ளார். பின்னர் தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 4 பேரும் வீட்டில் மயங்கி கிடந்தனர்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி பீடி இலைகள் பறிமுதல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:39:32 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: என்.ஆர். தனபாலன் அறிவிப்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:35:08 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)
