» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!

ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி தாளமுத்து நகர், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் என்ற ஜஸ்டின் சீலன் (35), எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திர பிரியா (31) என்ற மனைவியும், ஸ்டேபி (10) ஆரோக்கிய பிரின்ஸ் (8) மற்றும் ஜெசிக்கா (10 மாதம்) என 3 குழந்தைகள் உள்ளனர். 

ஜஸ்டின் சீலன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை துன்புறுத்துவாராம். மேலும், வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க மாட்டாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சந்திர பிரியா தனது 3 குழந்தைகளுக்கும் தலைக்கு தேய்க்கும் சாயத்தை குடிக்கச் செய்துள்ளார். பின்னர் தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 4 பேரும் வீட்டில் மயங்கி கிடந்தனர்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors



CSC Computer Education




Thoothukudi Business Directory