» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி பீடி இலைகள் பறிமுதல்!

திங்கள் 17, மார்ச் 2025 8:39:32 AM (IST)



திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை ஊருக்கு  வட புறம்  உள்ள கடற்கரையில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ வீதம் 82 மூடைகளில் இருந்த பீடி இலைகளை பறிமுதல் செய்துளள்னர். இதனை கடத்த முயன்ற மர்ம நபர்கள் படகுடன்  தப்பித்துச் சென்று விட்டார்கள். அவர்கள் பயன்படுத்திய 2 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றபட்ட பீடி இலைகளின் மதிப்பு  சுமார் 1 கோடி ஆகும். பீடி இலைகள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education




New Shape Tailors



Thoothukudi Business Directory