» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!

ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஓம்குமார் (48), இவர் அங்கு பிரபல ஜவுளி கடை நடத்தி வருகிறார் இவர் தனது குடும்பத்தினர்கள் 12 பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் 100 ரூபாய் தரிசனம் டிக்கெட் எடுத்து வரிசையில் நின்றாராம்.

இரண்டு மணி நேரமாக வரிசையில் நின்ற அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory