» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!

ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)



தூத்துக்குடியில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு சாலையில் பள்ளத்தை தாமாக முன்வந்து சரி செய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தூத்துக்குடி 4ம் கேட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்து ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு, நேற்று அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்தியபாகம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் வள்ளிநாயகம் அப்பகுதியில் இருந்த மணலை மூடையில் அள்ளி பள்ளத்தில் கொட்டி சரி செய்தார்.

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்காமல் இருப்பதற்காக தாமாக முன்வந்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட மேற்படி போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors


CSC Computer Education




Thoothukudi Business Directory