» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!

ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)

தூத்துக்குடியில் மது போதையில் டார்ச்சர் செய்த கணவனை உருட்டுகட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ரவீந்திரன் (55), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாலம்மாள் (53), இந்த தம்பதிக்கு 3மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது இதனால் கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இதற்கிடையே ரவீந்திரன் தினசரி மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவி பாலம்மாளிடம் தகராறு செய்வாராம். மேலும் அவருக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று மதியம் மதுபோதையில் வந்த ரவீந்திரன் மனைவியிடம் டார்ச்சர் செய்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி பாலம்மாள் வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் அவரை சரமரியாக தாக்கினாராம்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து பாலம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education

New Shape Tailors





Thoothukudi Business Directory