» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)



தூத்துக்குடி விவிடி சிக்னல் உள்ளிட்ட பிரதான சாலைகளில் தற்காலிக மேற்கூரை அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

பின்னர் மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரதான சந்திப்புகளான எட்டையாபுரம் ரோடு, விவிடி சிக்னல், ஜெயராஜ் ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சிக்னலில் நிற்கும் பொழுது வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக தற்காலிக மேற்கூரை அமைத்து தருமாறு வந்த மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து அந்த பணிகளானது விரைவில் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, திமுக பகுதி செயலாளர்  ரவீந்திரன், மண்டல தலைவர் தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் முத்துவேல் ஆகியோர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து

P. கண்ணன்Mar 15, 2025 - 10:09:25 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மக்களின் கனவுதிட்டமான வீவிடி சிக்னலில் மேம்பாலம் அமைக்க ஒவ்வொரு அரசும் முயன்றும் முடிவில்லாமல் போனது இந்த அரசாவது மேயரின் தூன்டுதலின் பேரல் வெற்றி அடைமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory