» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வெள்ளி 7, பிப்ரவரி 2025 7:54:54 PM (IST)

தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்யாத மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகள் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையினை வழங்கிட கோரியும் தொழிலாளருக்கு குறைந்தபட்ச ஊதியம் 26,000 குறையாமல் நிர்ணயம் செய்யவும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அண்ணா நகர் 7வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியுசி மாநில தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக தொழிற்சங்க மாவட்டதலைவர் சுசி, ரவீந்திரன் செயலாளர் முருகன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் ராஜகோபாலன், செயலாளர் கருப்பசாமி, சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் ரசல், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் சகாயம் செயலாளர் சிவராமன் உள்பட 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயியிடம் செல்போன் திருட்டு: 3பேர் கைது
புதன் 2, ஏப்ரல் 2025 7:53:48 AM (IST)

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: சிறுவன் உள்பட 2 பேர் கைது
புதன் 2, ஏப்ரல் 2025 7:50:05 AM (IST)

திருச்செந்தூர் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு: ஆய்வு செய்ய பக்தர்கள் கோரிக்கை!
புதன் 2, ஏப்ரல் 2025 7:44:32 AM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:56:34 PM (IST)

சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் : பொதுமக்கள் அவதி!!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:46:46 PM (IST)

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

IndianMar 27, 2025 - 12:49:47 PM | Posted IP 172.7*****