» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேம்பாரில் காசநோய் ஒழிப்புத் திட்டம் சிறப்பு முகாம்

ஞாயிறு 5, ஜனவரி 2025 8:56:31 AM (IST)



வேம்பாரில் 100 நாள் டிபி பிரச்சாரத்தின் கீழ் மீன் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனியில் காச நோய் கண்டறியும் முகாம்  நடைபெற்றது. 

காச நோயில்லா இந்தியா 100 நாள் டிபி பிரச்சாரத்தில் வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட  பியர்ல் சிட்டி மெரைன் புராடக்ட்ஸ் மீன் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனியில் காச நோய் கண்டறியும் முகாம்  நடைபெற்றது. முகாமை உரிமையாளர் அலி, நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் ராஜேசேகர் ஆகியோர் தலைமை தாங்கி பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி துவக்கி வைத்தனர்.

கம்பெனி மேலாளர் சாமுவேல் ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். முகாமில் சுகாதார ஆய்வாளர் இராமலிங்கம், நடமாடும் மருத்துவ குழு, முதுநிலை சிகிச்சை மேலாளர் கணேசமூர்த்தி, முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் செல்வரதி, சுகாதார பார்வையாளர் அமுதா, அனைத்து MLHP, WHV , மற்றும் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory