» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் தொட்டி பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து: தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 5, டிசம்பர் 2024 5:04:48 PM (IST)



தூத்துக்குடியில் குடிநீர் தொட்டி பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தூத்துக்குடி மாநகராட்சி 45 வது வார்டு பிரையன்ட் நகர் 11 வது தெரு மேற்கு கட்டபொம்மன் நகர் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு தொட்டி மூடி அமைக்காமல் இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம், மற்றும் மண்டலம் வாரியாக நடைபெற கூடிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இன்று குடிநீர் ஏற்றி வந்த தனியார் வாகனம் நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க குடிநீர் தொட்டிக்கு தரமான மூடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக தண்ணீர் லாரியில் இருந்து வீணாக வெளிவரும் நீரில் பொதுமக்கள் உற்சாகம் குளித்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory