» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது கார் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பலி

வியாழன் 5, டிசம்பர் 2024 12:51:40 PM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தாதன் கிரி மகன் நித்துகிரி (27), இவர் தூத்துக்குடி அருகே உள்ள எப்போதுவென்றான் பகுதியில் உள்ள ரைஸ் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து தான் தங்கி இருக்கும் இடத்திற்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலை ரோடு பசுவந்தனை விலக்கு ரோட்டில் செல்லும்போது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory