» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்!
புதன் 6, நவம்பர் 2024 8:02:17 AM (IST)
தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் தினசரி பணி வழங்க வலியுறுத்தி 2-ஆவது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றன. இவா்கள் காலை 5 மணிக்கு சென்று, இரவு 9 மணிக்குள் கரைக்கு வந்து விடுவா். இதன் காரணமாக, ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விசைப்படகு உரிமையாளா்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் படகுகள் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று அவா்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சென்று வந்தனா். ஆனாலும் மீன்பாடு அதிகம் இல்லாததால் தினசரி குறைந்த அளவு விசைப்படகுகள் கடலுக்கு சென்று வந்தன.
இந்த நிலையில், தினசரி பணி வழங்கக் கோரி விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இப் போராட்டம் 2-ஆவது நாளாக நேற்றும் நீடித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:56:34 PM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி நிர்வாகக் குழு பாெறுப்பேற்பு விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 8:43:01 PM (IST)

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
செவ்வாய் 15, ஜூலை 2025 8:11:14 PM (IST)

ஆற்று மணல் திருடிய வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:03:03 PM (IST)

தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:10:46 PM (IST)

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)
