» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்!

புதன் 6, நவம்பர் 2024 8:02:17 AM (IST)

தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் தினசரி பணி வழங்க வலியுறுத்தி 2-ஆவது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றன. இவா்கள் காலை 5 மணிக்கு சென்று, இரவு 9 மணிக்குள் கரைக்கு வந்து விடுவா். இதன் காரணமாக, ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, விசைப்படகு உரிமையாளா்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் படகுகள் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று அவா்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சென்று வந்தனா். ஆனாலும் மீன்பாடு அதிகம் இல்லாததால் தினசரி குறைந்த அளவு விசைப்படகுகள் கடலுக்கு சென்று வந்தன.

இந்த நிலையில், தினசரி பணி வழங்கக் கோரி விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இப் போராட்டம் 2-ஆவது நாளாக நேற்றும் நீடித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory