» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ டிரைவரை கம்பியால் தாக்கிய தம்பதி கைது

வியாழன் 24, அக்டோபர் 2024 8:33:42 AM (IST)

நாசரேத் அருகே ஆட்டோ டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி(26). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 19 ஆம் தேதி இரவு ஏரல் அருகே உள்ள பண்ணைவிளையைச்சேர்ந்த தாசன் மகன் சுரேஷ்ரோஜ் (26) அவரது மனைவி கனகா ஆகியோரை சவாரி அழைத்து சென்றுள்ளார். 

அப்போது வாடகை தொடர்பாக ஜெயக்கொடிக்கும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ்ரோஜ், ஜெயக்கொடியை இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப் பதிந்து, சுரேஷ் ராஜ், அவரது மனைவி கனகா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:14:58 AM (IST)

பைக் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் பலி!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:11:32 AM (IST)

Sponsored Ads



New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory