» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ டிரைவரை கம்பியால் தாக்கிய தம்பதி கைது
வியாழன் 24, அக்டோபர் 2024 8:33:42 AM (IST)
நாசரேத் அருகே ஆட்டோ டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி(26). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 19 ஆம் தேதி இரவு ஏரல் அருகே உள்ள பண்ணைவிளையைச்சேர்ந்த தாசன் மகன் சுரேஷ்ரோஜ் (26) அவரது மனைவி கனகா ஆகியோரை சவாரி அழைத்து சென்றுள்ளார்.
அப்போது வாடகை தொடர்பாக ஜெயக்கொடிக்கும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ்ரோஜ், ஜெயக்கொடியை இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப் பதிந்து, சுரேஷ் ராஜ், அவரது மனைவி கனகா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.