» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்தையாபுரம் பகுதியில் வேகத்தடை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வியாழன் 24, அக்டோபர் 2024 11:02:11 AM (IST)
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வேகத்தடை அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பல்க் பகுதியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பகுதியில் ஹைமாஸ் மின் விளக்கு மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று மேயர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், விஜயகுமார், முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.