» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் பலி!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:11:32 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகேயுள்ள குலையன் கரிசல், தெற்கு ரத்தினபுரியை சேர்ந்தவர் கணபதி மகன் மாரிக்குமார் (39), இவர் கடந்த கடந்த 21ஆம் தேதி மோட்டார் பைக்கில் புதுக்கோட்டையில் இருந்து பேரூரணி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) ரமேஷ் மோகன் வழக்கு பதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவரான நடுவக்குறிச்சி சுந்தரராஜபுரத்தை சேர்ந்த நாராயணன் மகன் கருப்பசாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:14:58 AM (IST)

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory