» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் பலி!
வியாழன் 24, அக்டோபர் 2024 11:11:32 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள குலையன் கரிசல், தெற்கு ரத்தினபுரியை சேர்ந்தவர் கணபதி மகன் மாரிக்குமார் (39), இவர் கடந்த கடந்த 21ஆம் தேதி மோட்டார் பைக்கில் புதுக்கோட்டையில் இருந்து பேரூரணி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) ரமேஷ் மோகன் வழக்கு பதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவரான நடுவக்குறிச்சி சுந்தரராஜபுரத்தை சேர்ந்த நாராயணன் மகன் கருப்பசாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.