» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:14:58 AM (IST)

தட்டார்மடம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள நடுவகுறிச்சி, அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுயம்பு மகன் சக்திவேல் (39). இவருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. 

இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மன வேதனையடைந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் பலி!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:11:32 AM (IST)

Sponsored Ads





Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory