» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை!
வியாழன் 24, அக்டோபர் 2024 11:14:58 AM (IST)
தட்டார்மடம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள நடுவகுறிச்சி, அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுயம்பு மகன் சக்திவேல் (39). இவருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மன வேதனையடைந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.