» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : நவ. 13-க்கு விசாரணை ஒத்திவைப்பு
வியாழன் 24, அக்டோபர் 2024 8:23:38 AM (IST)
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நவ. 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீன்வளம்- மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர், அவரது தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.
சொத்துக் குவிப்பு வழக்கைப் பதிவுசெய்த ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி பெருமாள்சாமியிடம் அமைச்சர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து, வழக்கு விசாரணையை நவ. 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டார்.