» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : நவ. 13-க்கு விசாரணை ஒத்திவைப்பு

வியாழன் 24, அக்டோபர் 2024 8:23:38 AM (IST)

அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நவ. 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீன்வளம்- மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர், அவரது தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

சொத்துக் குவிப்பு வழக்கைப் பதிவுசெய்த ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி பெருமாள்சாமியிடம் அமைச்சர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து, வழக்கு விசாரணையை நவ. 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:14:58 AM (IST)

பைக் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் பலி!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:11:32 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory