» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மக்கள் விருப்பத்திற்கேற்ப கேரளா பர்னிச்சர் கண்காட்சி மீண்டும் தொடக்கம்
செவ்வாய் 22, அக்டோபர் 2024 5:37:28 PM (IST)
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள ராமையா மஹாலில் கேரளா பர்னிச்சர் கண்காட்சியினை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.
கண்காட்சியில் ஏராளமான பர்னிச்சர்கள் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது. புகழ் பெற்ற மைசூர் கார்விங் ஹேண்ட் மேட் வேலைப்பாடுகளுடன் கூடிய வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களும் டெல்லி ஆன்டிக் டிசைனர் சோபாக்கள், நீரலாம்பூர் டீக்வுட் பர்னிச்சர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
மேலும் தேக்குமர சோபா, கட்டில், டைனிங் ஷோபா, காம்பெக்ட் பெட்ரூம் செட், கல்யாண சீர்வரிசை, கார்னர் சோபா மெத்தை டீப்பாய்கள் திவான் செட் ஊஞ்சல் உள்ளிட்ட அனைத்து விதமான பர்னிச்சர்களும் கிடைக்கும் என்று நிறுவனர் ஆர்.எம். நவ்ஷாத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்கள் விருப்பத்திற்கேற்ப கேரளா பர்னிச்சர் கண்காட்சி மீண்டும் நடைபெறுகிறது. பர்னிச்சர் கண்காட்சி அக்.22 முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தார்.