» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவர் பேரவை தேர்தல் நடத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மனு!
செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:40:28 PM (IST)
கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தல் நடத்திட வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி முதல்வர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஜனநாயக முறையில் மாணவர் பேரவை தேர்தல் நடத்திட வலியுறுத்தி அக்டோபர் 22ம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அரசு கல்லூரி முதல்வர்களிடம் கோரிக்கை மனு அளித்திட தமிழ்நாடு மாநிலக் குழு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் வ.உ.சி கல்லூரி மற்றும் காமராஜர் கல்லூரி முதல்வர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தே.சரவணன் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எம்.கிஷோர்குமார் வ.உ.சி கல்லூரி மற்றும் காமராஜர் கல்லூரி நிர்வாகிகள் மாடசாமி, ராம்குமார், ஜெய்ஹிந்த், ராஜ் சுரேஷ், அருண், கணேசன், நேசமணி உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.