» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவர் பேரவை தேர்தல் நடத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மனு!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:40:28 PM (IST)



கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தல் நடத்திட வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி முதல்வர்களிடம் மனு அளிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் ஜனநாயக முறையில் மாணவர் பேரவை தேர்தல் நடத்திட வலியுறுத்தி அக்டோபர் 22ம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அரசு கல்லூரி முதல்வர்களிடம் கோரிக்கை மனு அளித்திட தமிழ்நாடு மாநிலக் குழு  அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் வ.உ.சி கல்லூரி மற்றும் காமராஜர் கல்லூரி முதல்வர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தே.சரவணன் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எம்.கிஷோர்குமார் வ.உ.சி கல்லூரி மற்றும் காமராஜர் கல்லூரி நிர்வாகிகள் மாடசாமி, ராம்குமார்,  ஜெய்ஹிந்த், ராஜ் சுரேஷ், அருண், கணேசன், நேசமணி உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

வடிகால் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

செவ்வாய் 22, அக்டோபர் 2024 3:44:55 PM (IST)

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory