» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாகலாபுரம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:02:25 PM (IST)
நாகலாபுரம் எஸ்.கே.கே. இந்து உயர் நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் எஸ்.கே.கே. இந்து உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட பள்ளி மாணவ மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒத்திகை நடந்தது. பட்டதாரி ஆசிரியர் மா.தங்கமாரியப்பன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர். ரா.மதன் முன்னிலை வகித்தார்.
விளாத்திகுளம் தீயணைப்பு மீட்புப்பணி நிலைய அலுவலர் மு.சங்கரன் மற்றும் நிலைய பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு விபத்து இல்லாமல் பட்டாசு வெடிப்பதன் அவசியம் மற்றும் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சிகளை நேரடி செயல் விளக்கமாக விளக்கினர். தொடர்ந்து பல்வேறு மாணவ மாணவியரகள் எழுப்பிய சந்தேக வினாக்களுக்கும் பதில் கலந்துரையாடல் செய்து விபத்து இல்லா தீபாவளி கொண்டாட நல் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
முடிவில் பட்டதாரி ஆசிரியர் க.மாரிக்கண்ணன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் கா.சுகுமார் செய்தார். நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.